×

பென்ஷனர் சங்க கூட்டத்தில் தீர்மானம் கடன் தொல்லை மாயமான லாரி டிரைவர் சடலமாக மீட்பு

ஜெயங்கொண்டம், மார்ச் 19: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காணாமல் போன டிரைவர் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆமணக்கந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்மேகம் (30). லாரி டிரைவர். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கௌசல்யா என்ற மனைவியும், அகரன், ஹாசினி என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் லாரி ஓட்டும் வேலைக்கு சென்றால் 10 அல்லது 15 நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவது வழக்கம். அதேபோன்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு லாரி தொழிலுக்கு சென்றவர் 6 நாட்களுக்கு முன்பு தனது மனைவி கௌசல்யாவிற்கு வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். அப்பொழுது தனக்கு கடன் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் பேசியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த மனைவி தனது உறவினர்களிடம் கூறி கணவரை தேடி வந்தார். அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்துள்ளதால் மேலும் அவரை தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை புதுக்குடி பெரியபாலம் அருகே ரோட்டில் சென்றவர்கள் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து பார்த்ததில் ஒரு ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்ததை அடுத்து அவரது உடலை சோதனை செய்து பார்த்ததில் ஓட்டுநர் உரிமம் கண்டெடுக்கப்பட்டது. அது காணாமல் போன கார்மேகம் என்பதும் தெரியவந்தது. மேலும் உடலின் அருகே விஷ பாட்டில் மற்றும் அவரது செல்போன் கண்டெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டிரைவரின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை செய்ததில் கடன் தொல்லை அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. அதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Tags : Pensioners Association ,
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...