×

குளித்தலை அருகே நிறைமாத கர்ப்பிணியான மகள் சாவில் மர்மம் பெற்றோர் போலீசில் புகார்

குளித்தலை, மார்ச் 19: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ராஜேந்திரம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி (32), புரோகிதர். இவருக்கு திருமணம் ஆகி 8 ஆண்டு ஆகிறது. மனைவி ஜனனி(28), 6 வயதில் மகன் உள்ளார். தற்போது ஜனனி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் புரோகிதர் பார்த்தசாரதி கடன் தொல்லையால் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மனமுடைந்த மனைவி ஜனனி நேற்று முன்தினம் இரவு வீட்டு மாடியின் விட்டத்தில் வேஷ்டியில் தூக்கிலிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் கணவர் கதவைத் தட்டி பார்த்தபோது திறக்காமல் இருந்துள்ளது. பின்னர் ஜன்னலில் திறந்து பார்த்தபோது ஜனனி தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே மீட்டு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியவுடன் மீண்டும் உடலை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இது குறித்து உடுமலைப்பேட்டையில் உள்ள பெண்ணின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேற்று காலை அவர்கள் வந்தனர். மகள் ஜனனி இறப்பு குறித்து சந்தேகம் இருப்பதாக குளித்தலை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்ததின் பேரில் குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிறைமாத கர்ப்பிணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Kulithalai ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...