×

தண்ணீருக்கு அலையும் கால்நடைகள் தோகைமலை அருகே கல்லூரி மாணவி மாயம்

தோகைமலை, மார்ச் 19: தோகைமலை அருகே ஆர்.டி.மலை ஊராட்சி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவி வெளியில் செல்வதாக வீட்டில் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். ஆனால், இரவு முழுவதும் வீட்டிற்கு வராத மாணவியை உறவினர்கள் வீட்டில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Tags : Tokaimalai ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு