×

ஆப்பனூர் மாசா திருவிழாவில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு

சாயல்குடி, மார்ச் 19:  கடலாடி அருகே உள்ள ஆப்பனூரில் ஆண்டுதோறும் மாசி மாதம் முழுவதும் மாசா திருவிழா கொண்டாடுவது வழக்கம். இதன் முதல் நிகழ்ச்சியாக கடந்த மாசி மாதம் முதல் செவ்வாய் கிழமை முள்ளி நடுதலுடன் விழா துவங்கியது. ஆப்பனூர் ஆண்டியனேந்தல் கிராமத்திலுள்ள அரியநாயகி அம்மன் கோயிலில் கணபதி ஹோமம் மற்றும் யாகச்சாலைகள் வளர்க்கப்பட்டு முதல்கால பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது.
கோயில் வளாகத்தில் வளர்ந்திருந்த முள்ளி எனப்படும் நெறுஞ்சி வகை செடியை எடுத்து ஊர்வலமாக வந்து ஆப்பனூர் கிராம மையத்தில் உள்ள முளைக்கொட்டு திண்ணை கோயிலில் நடப்பட்டது. அன்று முதல் இந்த புனித செடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பெண்கள் கும்பி அடித்தும், இளைஞர்கள் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் ஆடியும் உற்சாகமாக ஒரு மாதம் முழுவதும் கொண்டாடினர். அரியநாயகி அம்மனுக்கு பால், விபூதி,சந்தனம் உள்ளிட்ட 18 வகை பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.

Tags : Pongalittu ,Appanur Masa Festival ,
× RELATED நெல்லை அரசு சித்த மருத்துவ...