×

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் இந்து முன்னணியினர் 200 பேர் கைது மானாமதுரையில் பரபரப்பு

மானாமதுரை, மார்ச் 19: மானாமதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டனர். மானாமதுரை சிவகங்கை மெயின் ரோட்டில் தயாபுரம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் அருகே முறையான அனுமதி இல்லாமல் கிறிஸ்தவ தேவாலயம் கட்டப்பட்டுள்ளதாக கூறி, இந்து முன்னணி அமைப்பினர் மானாமதுரை பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்படாததால், முறையான அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

Tags : Manamadurai ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...