×

பரமக்குடி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் திமுக வேட்பாளர் முருகேசன் வாக்குறுதி


பரமக்குடி, மார்ச் 19:  பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக முருகேசன் போட்டியிடுகிறார். அவர் நேற்று பரமக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் அவரது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், தொகுதி பொறுப்பாளர் திசைவீரன், முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜ், பரமக்குடி நகர் செயலாளர் சேது கருணாநிதி, போகலூர் ஒன்றிய பொறுப்பாளர் கதிரவன், காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் கிருஷ்ணதாஸ் ஆகியோர் உடனிருந்தனர். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் துரைமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து திட்டங்களும் பரமக்குடியில் செயல்படுத்தப்படும். நான் வெற்றி பெற்றவுடன் முதல் பணியாக பரமக்குடி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, முன்னாள் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத், மாநில தீர்மானக்குழு துணைத்தலைவர் திவாகர், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் செந்தில் செல்வானந்த், பரமக்குடி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், சந்திரசேகர். நயினார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் சக்தி, அண்ணாமலை. பரமக்குடி நகர் இளைஞரணி அமைப்பாளர் சம்பத் உள்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Murugesan ,Paramakudi Nagar ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...