×

வேடசந்தூரில் அடுத்தடுத்த 4 வீடுகளை உடைத்து கொள்ளை முயற்சி 30 பவுன் தப்பியது

வேடசந்தூர், மார்ச் 19: வேடசந்தூர் யூசுப் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். தொடர்ந்து மர்மநபர்கள் 2 பீரோக்கள் என எல்லா இடங்களிலும் தேடியும் வீட்டில் இருந்த 30 பவுன் தங்க நகைககள் அவர்களது கண்ணில் படவில்லை. இதனால் மர்மநபர்கள் திரும்பி சென்று விட்டனர். தொடர்ந்து மர்மநபர்கள் அடுத்தடுத்து 3 வீடுகளை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அதில் ஒரு வீட்டில் மட்டும் அரை பவுன் தோடு, ரூ.2,500 பணம் சிக்கியது. 3 பேர் சட்டை போடாமல், தலை- முகத்தில் துணியால் கட்டி கொண்டு செல்லும் காட்சி அங்குள்ள ராணுவவீரர் சிவராஜ் வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் 3 பேரும் கையில் ஆயுதங்களுடன் சுற்றியதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாயினர். தற்போது தேர்தல் பணியில் காவலர்கள் ஈடுபட்டு உள்ளதால் இரவு ரோந்து பணி குறைந்து விட்டது. எனவே வேடசந்தூர் போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்துவதுடன், 3 மர்மநபர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vedanthur ,
× RELATED சிட்டிங் எம்எல்ஏவுக்கு ‘அதிர்ச்சி...