×

பாஸ்கர் எம்எல்ஏ வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

நாமக்கல், மார்ச் 18: நாமக்கல் சட்டமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் எம்எல்ஏ பாஸ்கர் 3வது முறையாக போட்டியிடுகிறார். இவர் நேற்று பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளிலும், வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். கலைவாணி நகர், பாரதி நகர், பெரியசாமி நகர், கடைவீதி, காளியம்மன் கோயில் தெரு, அக்ரஹாரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பொதுமக்கள் மத்தியில் எம்எல்ஏ பாஸ்கர் பேசியதாவது: மோகனூர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தனி தாலுகா ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகத்துக்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மோகனுர் - நாமக்கல் சாலை ₹64 கோடியில் அகலப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து எனக்கு வாய்ப்பு அளியுங்கள். மேலும் பல திட்டங்களை மோகனூரில் நிறைவேற்றுவேன். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன். இவ்வாறு பாஸ்கர் எம்எல்ஏ தெரிவித்தார்.பிரசாரத்தின் போது, பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், பேரூர் செயலாளர் தங்கமுத்து, துணைச் செயலாளர் சிவஞானம், ராஜவடிவேல் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

Tags : Bhaskar ,MLA ,
× RELATED ஹீரோவாக நடிக்க பயமாக இருக்கிறது: எம்.எஸ்.பாஸ்கர்