×

சுட்டெரிக்கும் வெயில் இளநீர் விற்பனை ஜோர்

போச்சம்பள்ளி, மார்ச் 18: போச்சம்பள்ளியில் வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் கடும் அவதியடைகின்றனர். கடந்த சில நாட்களாக காலை நேரங்களிலேயே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க துவங்கியது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து, வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மேலும், இரவு நேரங்களில் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உடலின் உஷ்ணத்தை குறைக்கும் தர்ப்பூசணி, இளநீர், ஜூஸ், பழங்களின் விற்பனை களைகட்டியுள்ளது.

Tags : Burning ,Weil ,Water ,Sales ,
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...