வீரவநல்லூர், மார்ச் 19: சேரன்மகாதேவி தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் அதிமுக வேட்பாளர் இசக்கிசுப்பையா பூத் கமிட்டி பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கிசுப்பையா சேரன்மகாதேவி தாலுகாவிற்குட்பட்ட கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவி, வீரவநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று பூத் கமிட்டி பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மேற்கண்ட பேரூராட்சி பகுதிகளுக்கு சென்ற இசக்கிசுப்பையா ஒவ்வொரு வார்டு பகுதியாக சென்று பொறுப்பாளர்களை சந்தித்து தேர்தல் நேரத்தில் பணியாற்றுவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். மேலும் ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் அவற்றை தீர்க்கும் வழிவகைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் செவல் முத்துசாமி, மாவட்ட இலக்கியஅணி கூனியூர் மாடசாமி, ஒன்றிய செயலாளர் கருத்தபாண்டி, சேரன்மகாதேவி மாரிச்செல்வம், நகர செயலாளர்கள் கோபாலசமுத்திரம் திருமலைநம்பி, மேலச்செவல் முருகன், பத்தமடை சங்கரலிங்கம், சேரன்மகாதேவி பழனிக்குமார், வீரவநல்லூர் சுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் கோபாலசமுத்திரம் கணேசன், சேரன்மகாதேவி இசக்கிபாண்டியன், முன்னோடிகள் இசக்கிமுத்து, பன்னீர்செல்வம், ஐசக்பாண்டியன், சவுந்திராஜன், அனந்தப்பன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மகாராஜன், மாரியப்பன், வீரவநல்லூர் ரவி, மற்றும் வார்டு செயலாளர்கள், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள், கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.