×

கடையநல்லூர் அமமுக வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியன் வேட்பு மனு தாக்கல்

கடையநல்லூர், மார்ச் 19: கடையநல்லூர் தொகுதியில் அமமுக கூட்டணி சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியன் நேற்று மாவட்ட செயலாளர் பொய்கை மாரியப்பன், எஸ்டிபிஐ நகர தலைவர் யாசர்கான் முன்னிலையில் தேர்தல் அலுவலர் ஷீலாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.முன்னதாக அய்யாத்துரை பாண்டியன் கடையநல்லூர் மணிக்கூண்டிலிருந்து திரளான தொண்டர்களுடன் அட்டைக்குளம் வரை ஊர்வலமாக வந்தார். நிகழ்ச்சியில் மக்கள் தேசிய தீ கட்சி தலைவர் ராஜாமறவன், தேமுதிக தொகுதி பொறுப்பாளர் மாரிச்செல்வம், நகர செயலாளர்கள் அமமுக கமாலுதீன், தேமுதிக சரவணன், மாநில நிர்வாகி மீரான், மாவட்ட நிர்வாகிகள் பெருமையாபாண்டியன், சுமதி கண்ணன், குமரேசன், கோமதி, அருணகிரிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், கற்பகம், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, லியாக்கத் அலி, ராமச்சந்திரன், சேது சுப்பிரமணியன், சாமித்துரை, ராம்குமரன், பாலமுருகன்,
நகர செயலாளர்கள்  ராமசாமி, சுகிர்தராஜன், அணைத்தலை, துரைப்பாண்டி, பேரூர் செயலாளர்கள் பரமசிவன், ராஜா, செய்யதலி, மாரியப்பன், திருப்பதி, நாகூர்மைதீன், முருகன், சார்பு அணி செயலாளர்கள் மாரியப்பன், ராஜேஷ், வெங்கடேஸ்வரன், கோதர்ஷா, ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் குமார், இளைஞரணி செயலாளர் மனோஜ், மாணவரணி செயலாளர் முத்துகுமார், இலக்கிய அணி செயலாளர் சரவணன் பாபு மற்றும் ஓவைசி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து அய்யாத்துரைபாண்டியன் கூறுகையில், கடையநல்லூர் தொகுதி மக்களை தேர்தலுக்காக மட்டும் சந்திக்கவில்லை. ஓராண்டு காலமாக நோய்தொற்று காலத்திலும் ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி குறைகளை கேட்டறிந்தேன். ஒருசில தேவைகளை அரசாங்கத்திற்காக காத்திருக்காமல் எனது சொந்த செலவில் செய்து கொடுத்தேன். கடையநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்றவுடன் ஒவ்வொரு பகுதியாக மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றுவேன். வாக்குறுதியை நிறைவேற்றி கொடுக்க வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.


Tags : Kadayanallur ,AIADMK ,Ayyathurai Pandian ,
× RELATED கடையநல்லூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி கண்டக்டர் பலி