×

தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் சிவகிரியில் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மனோகரன் எம்எல்ஏ

சிவகிரி, மார்ச் 19: சிவகிரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள்
ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சவுகை வெங்கடேசன் தலைமை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா சிறப்புரையாற்றினார்.
வாசுதேவநல்லூர் அதிமுக வேட்பாளர் மனோகரன் எம்எல்ஏ பேசும்போது, தொகுதிக்கு செய்த பல்வேறு வளர்ச்சிப் பணிகள், செய்ய இருக்கின்ற பணிகள் குறித்து பேசி தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய கேட்டுக் கொண்டார்.கூட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வாசுதேவநல்லூர் மூர்த்தி பாண்டியன், துரைப்பாண்டியன், சங்கரன்கோவில் ரமேஷ், மகாராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கம்பிச்சை, ஒன்றிய அவைத்தலைவர் முகமதுஉசேன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைசெயலாளர்கள் ஆயில்ராஜா பாண்டியன், சின்னத்துரை, புளியங்குடி நகர செயலாளர் பரமேஸ்வரபாண்டியன், மாவட்ட மாணவரணி முன்னாள் தலைவர் சசிக்குமார், மாவட்ட பிரதிநிதி பெரியதுரை, பேரூர் செயலாளர்கள் ராயகிரி சேவுகப்பாண்டியன், வாசுதேவநல்லூர் சீமான்மணிகண்டன், சிவகிரி காசிராஜன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜாராம் பாண்டியன்,  மருதுபாண்டியன்,  பாஜ மாவட்ட தலைவர் ராமராஜ், வாசுதேவநல்லூர் தொகுதி பொறுப்பாளர் பாண்டித்துரை, வடக்கு ஒன்றிய தலைவர் அர்ச்சுனன், பழனிசாமி சிவகிரி நகர தலைவர் தங்கம், வாசு., பாஜ தலைவர் அய்யர்சிகாமணி, மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் சங்கரநாராயணன், தமாகா தென்காசி மாவட்ட தலைவர் அய்யாத்துரை, மாநில இணைச்செயலாளர் ஏஜி.போஸ், வாசுதேவநல்லூர் வட்டார தலைவர் கென்னடி,  இளைஞரணி துணைத்தலைவர் அம்ஜத்கான், சிவகிரி நகரத் தலைவர் ராமராஜ், மாவட்ட விவசாய அணி தலைவர் சீனிவாசன், வாசு நகர தலைவர் போஸ்ராஜா மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Manokaran ,MLA ,Sivagiri ,National Democratic Alliance ,
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...