சங்கரன்கோவில், மார்ச் 19: சங்கரன்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளராக ராஜா போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் தேர்தல் காரியாலயம் திறக்கப்பட்டது. தொடர்ந்து செயல்வீரர்கள் நடந்த கூட்டம் நடைபெற்றது. மதிமுக மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து தேர்தலில் ஆற்ற கூடிய களப்பணி குறித்து பேசினார். தலைமை வகித்த திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், சங்கரன்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜாவை அமோக வெற்றி பெற செய்து தலைவர் ஸ்டாலின் முதல்வராக தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்றார். திமுக வேட்பாளர் ராஜா அறிமுக உரையாற்றினார்.
கூட்டத்தில் மதிமுக நகர செயலாளர் ஆறுமுகச்சாமி, விசிக தென்காசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வர்க்கீஸ், சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர் பீர்மைதீன், தவாக கணேசன், திராவிட தமிழர் கட்சி வீரப்பன், ஆதித்தமிழர் பேரவை தென்னரசு, பூலிதேவர் மக்கள் இயக்கம் பெருமாள்சாமி, ஆதிதிராவிடர் பேரவை பெருமாள், திமுக நகர செயலாளர் சங்கரன், மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர்கள் சோமசெல்வ பாண்டியன், அன்புமணி கணேசன், மாரிமுத்து, ஒன்றியசெயலாளர்கள் கடற்கரை, வெற்றிவிஜயன், சேர்மதுரை, கிறிஸ்டோபர், திருவேங்கடம் பேரூர் செயலாளர் பால்ராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் அண்ணாவியப்பன், முனியசாமி, செந்தில்குமார், முத்துக்குமார், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புனிதா மகேஷ்குமார் மகளிரணி துணை அமைப்பாளர்கள் அண்ணாமலை, சுப்புத்தாய், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், இளைஞரணி சரவணன், பிரகாஷ், மாவட்ட மாணவரணி அப்பாஸ் அலி மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் சங்கர், வக்கீல் ஜெயகுமார், ெபரியதுரை உள்பட பலர் பங்கேற்றனர்