திருவள்ளூர், மார்ச் 19: திருவள்ளுர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தேர்தல் அலுவலக திறப்பு விழா காக்களூர் பைபாஸ் சாலையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான த.எத்திராஜ் வரவேற்றார். காங்கிரஸ் மது, விசிக அருண்கௌதமன், ஸ்டீபன்ராஜ், சாம்சன், மதிமுக நித்யா, கம்யூனிஸ்ட் ஜெ.வெங்கடேசன், ஒன்றிய திமுக நிர்வாகிகள் கே.கே.சொக்கலிங்கம், மகேஸ்வரி பாலவிநாயகம், முரளி, ஏழுமலை, எஸ்.ஜெயபாலன், எஸ்.பிரேம்ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பூந்தமல்லி சட்டமன்ற திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் தொழுவூர் பா.நரேஷ் குமார், தண்ணீர்குளம் டி.டி.தயாளன், எஸ்.என்.குமார், டி.கே.அசோக்குமார், பொன்.விமல்வர்ஷன், டி.எம்.ராமச்சந்திரன், கௌரி கஜேந்திரன், வி.ஹரி, எஸ்.சௌந்தரராஜன், ஏ.கே.அபினேஷ், டி.கே.பூவண்ணன், திலீப்குமார், வேதவல்லி சதீஷ், அருண்கீதன், சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக காக்களூரில் வேட்பாளர் கிருஷ்ணசாமி மோட்டார் சைக்கிளில் வீதி வீதியாகச் சென்று தீவிரமாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.