×

10 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா பேட்டி

மதுராந்தகம், மார்ச் 19: மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா, ‘10 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்’ என்று கூறினார்.
மதுராந்தகம் (தனி) தொகுதியில் திமுக கூட்டணியில், மதிமுக சார்பில் மல்லை சத்யா போட்டியிடுகிறார். காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமையில், எம்பி செல்வம், மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி ஆகியோருடன் வேட்பாளர் மல்லை சத்யா ஊர்வலமாக சென்று மதுராந்தகம் நகர திமுக அலுவலகம் அருகே உள்ள  அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அங்கிருந்து ஆர்டிஓ அலுவலகம் சென்று, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்டிஓ லட்சுமி பிரியாவிடம், வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.அவருடன், செய்யூர் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, காஞ்சிபுரம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, காஞ்சி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சூ.க.ஆதவன், மதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் ஊனை பார்த்திபன், திமுக நகர செயலாளர் கே.குமார், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீதரன், சத்யசாய், கண்ணன், தம்பு, பேரூர் செயலாளர்கள் விஜயகணபதி, உசேன், மதிமுக மாவட்ட பொருளாளர் சங்கரன், நகர செயலாளர் ராஜி, ஒன்றிய செயலாளர்கள் கோட்டையன், கோபி, இளவரசு, ராஜா, பேரூர் செயலாளர்கள் சரத், முஜிபர் ரகுமான் உள்பட பலர் இருந்தனர்.

பின்னர், மல்லை சத்யா, செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு மாற்றத்துக்கான தேர்தலாக, இந்த தேர்தலை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. 10 ஆண்டு கால மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, மக்கள் காத்து கொண்டு இருக்கின்றனர். அதற்காக, மக்கள் எரிமலையாக வெடித்து, வெளியே வீதிக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். நாங்கள் போகும் இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்பதும், ஆதரவு தெரிவிப்பதும் ஒரு உதாரணம். இது எங்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என ஒவ்வொரு மக்களும் விரும்புகின்றனர். காரணம் மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் மோடி தலைமையிலான பாஜ அரசு, கொண்டு வந்துள்ள விவசாய விரோத சட்டங்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்கள் என எண்ணற்ற சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு புரட்சியை தீர்மானிக்க களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.மோடி எடுத்த எல்லா நிலைகளுக்கும், ஆமாம் சாமி போட்டு கொண்டிருந்தார் எடப்பாடி. அவரை, வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மக்கள் முடிவெடுத்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு பொற்கால ஆட்சியை, நமக்கு தருவார் என மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Madhimuga ,Mallai Satya ,
× RELATED குங்பூ மாஸ்டர் சேகரின் நினைவு...