×

பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை மர்மச்சாவு வனத்துறை விசாரனை

பந்தலூர், மார்ச் 19:  பந்தலூர் வனச்சரகம் மேங்கொரேஞ் தனியார் தேயிலைத்தோட்டம் பகுதியில் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் ஓம்காரம், பந்தலூர் ரேஞ்சர் கலைவேந்தன், வனக்காப்பாளர் தம்பக்குமார் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஒரு வயதான ஆண் சிறுத்தை, கழுத்து மற்றும் உடலில் சிறு காயங்கள் இருப்பதாகவும், மற்ற விலங்குகளுடன் சண்டையிட்டு இறந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். முதுமலை புலிகள் காப்பக வன உயிரின மருத்துவர் ராஜேஷ்குமார் இறந்த சிறுத்தையை உடல் கூறு பரிசோதனை செய்து புதைத்தனர்.

Tags : Leopard Marmachavu Forest Department ,Pandalur ,
× RELATED வனப்பகுதியில் காட்டு தீ