×

தொகுதி மக்களின் தேவையை உணர்ந்து செயல்படுவேன்'அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் பேச்சு

மதுராந்தகம், மார்ச் 18: மதுராந்தகத்தில் ஆதரவு திரட்டிய மரகதம் குமரவேல், தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை உணர்ந்து செயலாற்றுவேன் என கூறினார். மதுராந்தகம்  தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார். இதையொட்டி, மதுராந்தகம் நகரில் உள்ள அய்யனார் கோயில் அருகே நடந்த நிகழ்ச்சியில், மதுராந்தகம் நகர் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியும், முன்னாள் வார்டு கவுன்சிலருமான வெங்கட், வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார்.

அவருடன், மதுராந்தகம் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் உள்பட 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைத்து கொண்டனர். அப்போது, கட்சியில் புதிதாக இணைந்த அனைவருக்கும், அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், சால்வை அணிவித்து வாழ்த்தினார். தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடந்த பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில், வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது அவர் பேசுகையில், நான் இப்பகுதிக்கு புதிதல்ல. நான் ஏற்கனவே காஞ்சிபுரம் எம்பியாக இருந்தபோது, மதுராந்தகம் தொகுதிக்கு பல்வேறு நல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். அந்த செயல்கள் அனைத்தும் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால், தற்போது மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் வேட்பாளராக போட்டியிடுகிறேன். வெற்றி பெறும் பட்சத்தில், இந்த தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை உணர்ந்து செயலாற்றுவேன் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

Tags : Kumarael ,
× RELATED விவசாயத்துக்கு தேவையான தண்ணீர்...