×

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

உத்திரமேரூர், மார்ச் 18: உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் லதா தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். இதில் உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு, வாக்களிப்பதின் அவசியம், பணத்துக்காக வாக்குகளை விற்க கூடாது.  வாக்குரிமை நமது நாட்டு உரிமை உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், கோஷமிட்டு சென்றனர்.பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, கேத்தாரீஸ்வர்ர் கோயில் தெரு, பஜார் வீதி, சன்னதி தெரு உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று பேரூராட்சி அலுவலகம் வந்து சோ்ந்தது.

Tags : Awareness Rally ,
× RELATED திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி