×

வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய 100 கிலோ டால்பின் மீன்

வேதாரண்யம், மார்ச் 18: வேதாரண்யம் கடற்கரையில் 100 கிலோ எடையுள்ள டால்பின் இறந்து கரை ஒதுங்கியது. நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் நேற்று 100 கிலோ எடையுள்ள டால்பின் மீன் இறந்து கரை ஒதுங்கியது. இதுகுறித்து கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கானுக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். வனவர் சதீஷ் மற்றும் வனத்துறையினர் கடற்கரைக்கு வந்து இறந்த டால்பின் மீனை மீட்டு கடற்கரையில் புதைத்தனர். இந்த டால்பின், படகு அல்லது கப்பலில் அடிபட்டு இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags : Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்