பேராவூரணி, மார்ச் 18: பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் நேற்று 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு நேற்று 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நாம்தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் திலீபன், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ திருஞானசம்பந்தம், திமுக சார்பில் அசோக்குமார் சுயேட்சை வேட்பாளர் அக்ரி நடராஜன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஐவண்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.