குளத்தூர்,மார்ச் 18: குளத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்ற 2பேர் கைது செய்யப்பட்டனர். குளத்தூர் எஸ்.ஐ கங்கைநாதபாண்டியன் மற்றும் போலீசார் பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்துசென்றனர். அப்போது பஸ்ஸ்டாப் அருகே பூசனூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்த கெங்குராஜ் மகன் சின்ராஜ்(27) சட்டவிரோதமாக மதுவிற்று கொண்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அவரை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார் 5மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் பொட்டலூர் பகுதியில் பனையூர் தெற்கு தெருவை சேர்ந்த ஆறுமுகையா மகன் அழகுபாண்டி(42) சட்டவிரோதமாக மதுவிற்று கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்து 5மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.