×

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் வேட்புமனு தாக்கல்

விளாத்திகுளம், மார்ச் 18: விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் மார்கண்டேயன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். விளாத்திகுளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் விளாத்திகுளம் அம்பாள்நகரிலிருந்து ஊர்வலமாக சென்றார். மதுரை சாலை வழியாக சென்று கீழ ரத வீதி, காய்கறி மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் ஊர்வலத்தில் கலந்து ெகாண்டனர். அப்போது திமுக வேட்பாளர் மார்க்கண்டேயனுக்கு மாலை அணிவித்து மலர்தூவி வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுடன் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்திற்கு சென்ற மார்க்கண்டேயன், தேர்தல் நடத்தும் அலுவலர் அபுல்காசிமிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.பின்னர் வேட்பாளர் மார்க்கண்டேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; ‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டது. மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசுக்கு அதிமுக அரசு ஆதரவு அளித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு விரைவில் அமைக்கப்படும். விளாத்திகுளம் தொகுதியில்  வரலாற்றில் இல்லாத வகையில் திமுக ஏராளமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்’ என்றார்.

Tags : DMK ,Markandeyan ,Vilathikulam ,
× RELATED புதூர் மத்திய ஒன்றியத்தில் கிராமம்,...