×

கொங்கராயகுறிச்சி- வைகுண்டம் சாலையை படர்ந்து நிற்கும் முள்செடியால் வாகனஓட்டிகள் கடும் அவதி

செய்துங்கநல்லூர், மார்ச் 18: வைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சி-  வைகுண்டம் சாலையில் 3 கி.மீ. தொலைவுக்கு படர்ந்து நிற்கும் முட்செடிகளால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடுமையாக அவதிப்படுகின்றனர்.
 வல்லநாட்டில் இருந்து கொங்கராயக்குறிச்சி வழியாக வைகுண்டம் செல்லும் சாலையில், தெற்கு தோழப்பன்பண்ணை முதல் அங்குள்ள இசக்கி அம்மன் கோவில் இறக்கம் வரையிலான சாலையின் இருபுறமும் முட்செடிகள் அடர்ந்து சாலை குறுகிய நிலையில் உள்ளது. இதனால் பஸ்சில் ஜன்னலோரம் அமர்ந்து பயணிக்கும் பயணிகள் மீது முட்செடிகள் உரசி அவர்களை பதம் பார்க்கின்றன,அதோடு பஸ் டிரைவர்களுக்கு எதிரில் இருந்து வரும் எந்தவொரு இரு சக்கர வாகனமும் தெரிவதில்லை. அந்த அளவுக்கு சாலையை ஆக்கிரமித்து வளர்ந்து நிற்கும் முட்செடிகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் வாகனஓட்டிகள், பஸ்களில் பயணிக்கும் மாணவ, மாணவிகள், பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையாக அவதிப்படுகின்றனர். குறிப்பாக குறுகிய சாலை வழியாக வாகனங்கள் விலகி சென்று வருவதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.  எனவே இது விஷயத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி தக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tags : Kongarayakurichi-Auvaikundam road ,
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...