×

ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வீதி, வீதியாக வாக்குசேகரிப்பு

ராஜபாளையம், மார்ச் 18: ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார். கடந்த 4 நாட்களாக ராஜபாளையம் நகர் மற்றும் கிராமப்புறங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். ராஜபாளையம் சமந்தாபுரம் முஸ்லிம் தெருவில் அதிமுகவின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்து பேசுகையில், ‘தற்போது உள்ள காலகட்டங்களில் யாரையும் ஏமாற்றி ஓட்டு வாங்க முடியாது.  காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடியார் அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார். அதேபோன்று தாமிரபரணி-வைப்பாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டம் நிறைவேறினால் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதிகள் வளம் பெறும். இந்த திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது’ என்றார். கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Rajendrapalaji Street ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!