×

சங்கரன்கோவிலில் செயல்வீரர்கள் கூட்டம் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்

சங்கரன்கோவில் மார்ச் 18: சங்கரன்கோவில் தொகுதியின் அதிமுக வேட்பாளராக அமைச்சர் ராஜலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அவர், தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், சமுதாய பெரியவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். நேற்று முப்பிடாதி அம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். தொடர்ந்து சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ முருகசெல்வி வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் திருவேங்கடம் சாலையில் அமைந்துள்ள தேர்தல் பணிமனையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை வகித்தார். பாஜ மாவட்ட தலைவர் ராமராஜ், மாவட்டப் பொதுசெயலாளர் மணி, பாமக மாநில துணை பொதுச்செயலாளர் திருமலைக்குமாரசாமி, மாவட்ட தலைவலர் சுரேஷ், அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன், நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் சுப்பையா பாண்டியன், ரமேஷ், வேல்முருகன், வாசுதேவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜலட்சுமி அதிமுகவின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் சொல்லி பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். அதிமுக மகத்தான வெற்றி பெறும். புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மாவால் கட்டி காக்கப்பட்ட சின்னம் இரட்டை இலை. நமக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து நமது குறிக்கோள் இரட்டை இலையை ஜெயிக்க வைப்பது ஒன்றே என இருக்க வேண்டும் என பேசினார். தொடர்ந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

Tags : Sankarankoil ,AIADMK ,
× RELATED சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில்...