×

பறக்கும் படை சோதனை புளியரை, சிவகிரியில் ரூ.4.02 லட்சம் பறிமுதல்

செங்கோட்டை,  மார்ச் 18: கடையநல்லூர் தொகுதி புளியரையில் பறக்கும் படை அலுவலர் சிக்கந்தர் பீவி, வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற ஆனந்த் என்பவரின் வாகனத்தை சோதனை செய்தனர். அதில் ரூ.2,21,950ம், கேரளாவிலிருந்து வாடிப்பட்டிக்கு சென்ற மாணிக்கம் என்பவரின் வாகனத்தை சோதனை செய்ததில் ரூ.1,27,500ம் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த 3,49,400 ரூபாயை கடையநல்லூர் தாலுகா தலைமையிட துணை தாசில்தார் நாகராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிவகிரி: சிவகிரி அருகே ராயகிரி ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் முத்துப்பாண்டியன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திவான் காசிம், முதல்நிலை காவலர்கள் ரமேஷ்குமார், சுதந்திரராஜன், காவலர் கதிரவன் ஆகியோர் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வாகனத்தில் வந்த ராஜபாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி(44) என்பவர் வீட்டு உபயோகப் பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்து, வசூல்ரூ.53,310 வைத்திருந்தார். முறையான ஆவணங்கள் இல்லாததால் அப்பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து சிவகிரி தாலுகா அலுவலக தேர்தல் பிரிவில் பணியாற்றும் மணிகண்டனிடம்
ஒப்படைத்தனர்.

Tags : Sivagiri ,
× RELATED சிவகிரி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்