×

காங்கயத்தில் முகக்கவசம் அணியாத 19 பேருக்கு அபராதம்

காங்கயம், மார்ச் 18: காங்கயம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நகரில் உள்ள திருப்பூர் ரோடு, பழையகோட்டை, ஈரோடு ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டுநர்கள் 19 பேருக்கு அபராதமாக தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.3,800 வசூலிக்கப்பட்டது. நகராட்சி ஆணையர் மூர்த்தி தலைமையில், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், வருவாய் உதவியாளர் வருண் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இது குறித்து நகராட்சி ஆணையர் கூறுகையில், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து, கொரோனா குறித்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், என்றார்.



Tags : Kangayam ,
× RELATED சூலூரில் போக்சோ வழக்கில் இருவர் கைது