×

12 லட்சம் கல்லூரி மாணவர்கள் பதிவு

 

தர்மபுரி, ஆக.1: தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 12 லட்சம் கல்லூரி மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு படித்த இளைஞர்களின் கல்வி தகுதிகளை பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் கூடுதல் கல்வி தகுதிகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டங் களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் பதிவு செய்து வந்தனர். கடந்த காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்றார்போல், அரசு துறைகளில் பணிவாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் பெரும்பாலும் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, சீருடைப்பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் மூலமாகவே நிரப்பப்பட்டு வருகிறது. சில துறைகளில் மட்டும், அந்தந்த அலுவலகங்கள் மூலம் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வௌியிட்டு, தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து, பணிநியமன ஆணை வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

Tags : Dharmapuri ,Tamil Nadu ,Tamil Nadu Employment and Training Department ,District Employment and Career Guidance Centres ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...