×

தூத்துக்குடி, விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்



தூத்துக்குடி,மார்ச் 17: தூத்துக்குடி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் இன்று (17ம் தேதி) வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர்.  இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை : மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க வேட்பாளர்களாக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கீதாஜீவன், விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் மார்க்கண்டேயன் ஆகியோர் இன்று (புதன்) காலை 9 மணிக்கு விளாத்திகுளம் அம்பாள்நகர் ஜி.வி.மஹாலில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க மாநில மகளிரணிச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி விளாத்திக்குளம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள மார்க்கண்டேயனை அறிமுகப்படுத்தி பேசுகிறார். அதனைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு விளாத்திகுளம் தேர்தல் அதிகாரியிடம் மார்க்கண்டேயன் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.

இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.அதேபோல் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கீதாஜீவன் இன்று (புதன்) காலை 11 மணிக்கு போல்பேட்டை புதிய பேரூந்து நிலையம் அருகிலுள்ள போத்தி விநாயகர் கோயில் முன்பிருந்து மாநில மகளிரணிச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு ஆண்டாள்தெரு, 2-ம் கேட், கீழரதவீதி, டபுள்யூ.ஜி.சி ரோடு வழியாக பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு நிறைவடைகிறது. அங்கிருந்து 11.30 மணியளவில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்திட இருக்கிறோம். அதற்கு முன்பாக காலை 10 மணிக்கு ஹோட்டல் கீதா வளாகத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கான தலைமை தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட இருக்கிறது.

தொடர்ந்து மாலை 5மணி அளவில் 2-ம் கேட் அபிராமி திருமண மண்டபத்தில் நடைபெறும் தூத்துக்குடி சட்டமன்றத்தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை வகிக்கிறார். திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், காங்கிரஸ் கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் ஏபிசிவி.சண்முகம், மாவட்ட தலைவர் முரளிதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாநகர செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன், மாநகர செயலாளர் ஞானசேகர், மதிமுக மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், மாநகர செயலாளர் முருக பாரதி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி கிதர்பிஸ்மி, ஆதித்தமிழர் பேரவை கண்ணன், திராவிடர் கழகம் முனியசாமி, சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், ஆதித்தமிழர் கட்சி சுரேஷ், பார்வர்டு ப்ளாக் சிவராமப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் வரவேற்கிறார். இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். மேலும் கனிமொழி எம்.பி,  வேட்பாளர் கீதாஜீவனை ஆதரித்து இரவு 8மணி அளவில் 1-ம் கேட் காந்தி சிலை அருகிலும், இரவு 8.30 மணிக்கு சிதம்பரநகர் - பிரையண்ட்நகர் சந்திப்பிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Thoothukudi ,Vilathikulam ,DMK ,
× RELATED இன்று மாலையுடன் முடிவுக்கு வரும்...