×

காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட ஆய்வு நடத்தலாம்: கனிமொழி எம்.பி. விமர்சனம்

சென்னை: “தமிழ்நாட்டை விளம்பர மயக்கத்தில் வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு?. எல்லாவற்றிலும் திசைத்திருப்பும் தவெக அரசு, காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட ஆய்வு நடத்தலாம்” என திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “மாநில உரிமைகளை அடகு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு?

டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதோடு, தற்போது பாதி தமிழ்நாட்டிற்கு குடிநீர்ப் பிரச்சினை வருமளவுக்கு காவிரி விவகாரம் சென்றுவிட்டது. தவெக அரசு இனியும் இப்பிரச்சனையில் மௌனம் காக்காமல், உடனடியாக நடவடிக்கை வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Tags : Caviar River ,M. ,Chennai ,Government of Taweka ,Tamil Nadu ,Dekka government ,Kaviri riverbank ,Dimuka M. B. Kanylogi ,
× RELATED விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு...