×

பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

கோவில்பட்டி, மார்ச் 17: கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.  பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ பில்கள், மருத்துவ படிகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும். 2019ல் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு கடைசி சம்பள நிர்ணயம் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும். தொலை தொடர்பு துறையில் சேவை காலத்தில் ஈட்டி விடுப்புக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.

ஓய்வூதியர் சங்க கிளைத்தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். அதிகாரிகள் சங்கம் கிளைச்செயலாளர் கோலப்பன், ஓய்வூதியர் சங்க மாவட்ட உதவி செயலாளர் சுப்பையா ஆகியோர் துவக்க உரையாற்றினர். கிளைச்செயலாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். ஓய்வூதியர் சங்க அகில இந்திய உதவி தலைவர் மோகன்தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கிளைப் பொருளாளர் திருவட்டபோத்தி நன்றி கூறினார்.

Tags : BSNL ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...