×

பாளை தொகுதி எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முகமது முபாரக் தீவிர வாக்கு சேகரிப்பு

நெல்லை, மார்ச் 17:  அமமுக கூட்டணியில் பாளை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் நெல்லை முகமது முபாரக் முக்கியப் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வாக்குசேகரித்தார். அமமுக தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத்தலைவர் நெல்லை முகமது முபாரக் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தீவிர பிரசாரத்தை துவக்கிய அவர், முதல்கட்டமாக தொகுதியில் உள்ள முக்கியப் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார்.  ஜமாத்துல் உலமா சபையின் மாநில தலைவர் காஜா முகைதீன் பாகவி, பாலபிரஜாபதி அடிகளார், வான்முகில் சட்ட ஆலோசனை மைய நிறுவனரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான வக்கீல் பிரிட்டோ உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும் கூட்டணி கட்சி நிர்வாகிகளான அமமுக மாநகர் மாவட்டச் செயலாளர் பரமசிவ ஐயப்பன், அமமுக அமைப்புச் செயலாளர் பால் கண்ணன், தேமுதிக மாவட்டச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு திரட்டினார். நிகழ்ச்சிகளில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாவட்ட துணைத்தலைவர் ஷாஹுல் ஹமீத் உஸ்மானி, மாவட்ட பொதுச்செயலாளர் ஹயாத் முகமது, புறநகர் மாவட்டத் தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான், தொகுதி நிர்வாகி ஜாபர் இமாம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Pallai ,STPI ,Nellai Mohammed Mubarak ,
× RELATED மாஞ்சோலை தேயிலைத் தோட்ட...