×

பாலக்கோடு தொகுதியில் வெற்றிபெறுவதற்காக எனக்காக மக்களே தங்கள் சொந்த பணத்தை செலவு செய்கிறார்கள்


பாலக்கோடு, மாரச் 17: பாலக்கோடு திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம், வெள்ளிச்சந்தை ராஜம் ஜூஸ் பேக்கடரியில் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் இன்பசேகரன் எம்எல்ஏ தலைமை வகித்து, பாலக்கோடு திமுக வேட்பாளர் முருகனை அறிமுகப்படுத்தி பேசினார். கூட்டத்தில் வேட்பாளர் முருகன் பேசியதாவது:  என்னிடம் பணம் இல்லை என்பதை தெரிந்த மக்கள், அவர்களது சொத்துக்களை அடமானம் வைத்து பணம் தருகிறேன். நீங்கள் அமைச்சர் அன்பழகனை எதிர்த்து, திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறுங்கள் என கூறினார்கள். என்னுடைய நிலையை அறிந்த பாலக்கோடு தொகுதி மக்கள், அவர்களது சொந்த பணத்தை செலவு செய்து, பிரசாரத்தை நடத்தி வருகின்றனர். இந்த அன்புக்கும், பாசத்திற்கும் நன்றியுடன் இருந்து, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, மக்களுக்கு தூய்மையான ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பேன் என கூறி கண்கலங்கினார். இந்த கூட்டத்தில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.வி.சிற்றரசு, மதிமுக நவாப், சி.பி.ஐ.தேவராஜ், சி.பி.எம் நாகராஜ், விசிக ராஜகோபால், கொமதேக அசோகன், ஆனந்தகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி, முன்னாள் எம்எல்ஏ வெங்கடாஜலம், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மாதையன், சுடப்பட்டி சுப்பிரமணி, ராஜகுமாரி மணிவண்ணன், மாதேஷ், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் கோபால், அன்பழகன், குட்டி கவுண்டர், குமரவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Balakot ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...