×

செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் திருடிய வாலிபர் கைது: 17 பைக்குகள் பறிமுதல்

செங்கல்பட்டு, மார்ச் 17: பல்வேறு பகுதிகளில் வாகனங்களை திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 17 பைக்குகளை பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு ரயில் நிலையம், பஸ் நிலையம், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோயில், பரனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பைக்குகள் தொடர்ந்து திருடு போயின. இதுகுறித்து மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு தாலுகா, டவுன் ஆகிய காவல் நிலையங்களில், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து  புகார் அளித்தனர். இதையடுத்து, ஏஎஸ்பி ஆஷேஷ் பச்சாரே தலைமையில் 5 பேர் கொண்ட, குற்றப்பிரிவு தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் செங்கல்பட்டு மகேந்திரா சிட்டியில் நேற்று அதிகாலையில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ஒரு வாலிபரை, போலீசார் மறித்து நிறுத்தி விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மேலும் அவரிடம் லைசன்ஸ், இன்சூரன்ஸ் உள்பட எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து அவரை செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், செங்கல்பட்டு கரிமேடு பகுதியை சேர்ந்த விக்கி (எ) விக்ரம்  (25). ரயில் நிலையம், பஸ் நிலையம், வணிக வளாகம் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் பைக்குகளை, திருடி சென்று, குறைந்த விலைக்கு விற்றது தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின்படி ₹25 லட்சம் மதிப்பிலான, 17 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து, விக்ரமை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Chengalpattu ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!