×

திருவாரூர் நகரில் எரியாத சிக்னல் விளக்குகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

திருவாரூர், மார்ச் 17: திருவாரூர் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருவதால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக விளமல், வாழவாய்க்கால் உட்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் மூலம் சிக்னல் எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இது போன்ற விளமல், வாழ வாய்க்கால் உட்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் விளக்குகள் இருந்து வரும் இடத்தில் 4 சாலைகள் பிரிந்து செல்கின்றன இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிக்னல் விளக்குகள் இரவு நேரங்களில் சரிவர எரியாததன் காரணமாக விபத்துக்கள் நடைபெற்று வருவதால் இதனை தடுப்பதற்கு போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலை துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvarur ,
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...