×

தஞ்சையில் 20 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

தஞ்சை, மார்ச் 17: தஞ்சை வடக்குவாசல் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சாம்லாயின. தஞ்சை வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் ரோடு புண்ணியமூர்த்தி தோட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் இங்கு முத்தழகு என்பவர் வீட்டில் நேற்று மதியம் திடீரென தீ பிடித்தது. தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. காற்று பலமாக வீசியதால் அடுத்தடுத்து வீடுகளுக்கும் தீ பரவியது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வீடுகளிலிருந்து தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி அணைக்க முயன்றனர். இந்நிலையில் தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு படையினர் 3 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் 20க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் சேதமடைந்தது. மேலும் வீடுகளில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள், துணிமணிகள் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Tanjore ,
× RELATED தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு...