×

ராஜபாளையம் தொகுதியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு

ராஜபாளையம், மார்ச் 17: ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசுகையில், ‘‘விருதுநகர் மாவட்டத்தில் பட்டா இல்லாமல் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்தவர்களுக்கு பட்டா வாங்கி கொடுத்துள்ளேன். 68 ஆயிரம் நபர்களுக்கு முதியோர் பென்சன் வாங்கி கொடுத்துள்ளேன். ராஜபாளையம்   தொகுதி முழுவதும் 13 அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் தொகுதியில் குடிமராமத்து திட்டத்தில் ஏராளமான கண்மாய்கள், குளங்கள் தூர்வாரியதால் நீர் நிரம்பி உள்ளது. உங்களுக்காக கட்சி நிர்வாகிகளுக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன்’’ என்றார்.  
கூட்டத்தில் ராஜபாளையம் அதிமுக நகர செயலாளர் ரானாபாஸ்கரராஜ், ஒன்றிய செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், விருதுநகர் மேற்கு  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜா, விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் துரைமுருகேசன், சேத்தூர் நகர செயலாளர் பொன்ராஜபாண்டியன், செட்டியார்பட்டி நகர செயலாளர் அங்குத்துரைபாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராதாகிருஷ்ணன்ராஜா, விருதுநகர் மேற்கு மாவட்ட இணைச் செயலர் அழகுராணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல இணைச் செயலாளர் கருப்பசாமிபாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் செய்யதுசுல்தான், விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,Rajapalayam ,Minister ,Rajendrapalaji ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...