×

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் தர்ணா

விருதுநகர், மார்ச் 17: விருதுநகர் பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் தர்மராஜ், மத்திய மாநில ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு பொது செயலாளர் குருசாமி, மாநில உதவி செயலாளர் செல்வராஜன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் 1.1.2017 முதல் 15 சதவீத பென்சன் உயர்வை பிஎஸ்என்எல் பென்சனர்களுக்கு வழங்க வேண்டும். அக்.2020 மற்றும் ஜன.2021ல் வழங்க வேண்டிய 11.6 சதவீத டிஏவை உடன் வழங்க வேண்டும். நிலுவை உள்ள மெடிக்கல் பில் மற்றும் மெடிக்கல் அலவன்ஸ் தொகையை வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 8 சதவீத கருணைத்தொகையை உடன் வழங்க கோரி கோஷம் எழுப்பினர்.

Tags : BSNL ,Dharna ,
× RELATED பந்தலூரில் பிஎஸ்என்எல் சேவை குறைபாடு