- டிராட்ஸ்கி மரூத்
- திமுக மு. கே.
- ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்
- இலக்கியம்
- தோட்டத்தில்
- கனடா
- டிராட்ஸ்கி மருடு
- திமுக தலைவர்
- மு. கே. ஸ்டாலின்
சென்னை: கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025ஆம் ஆண்டிற்கான ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி மருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; நேர்த்தியான கோட்டோவியர் என்பதோடு அனிமேஷன் எனப்படும் இயங்குபடக் கலை, கணினி வரைகலை ஆகியவற்றிலும் தொடர்ந்து இயங்கி வந்த அவரது ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத் தலைவராக நமது திராவிட மாடல் அரசில் அவரை நியமித்தோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
