×

குடிநீர் கோரி மக்கள் மறியல் உசிலம்பட்டி அருகே பரபரப்பு

உசிலம்பட்டி, மார்ச் 17:உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது வலையபட்டி. இவ்வூரில் கடந்த 3 மாதங்களாக ஒரு குறிப்பிட்ட பகுதிகளுக்கு குடிநீர், போர்வெல் தண்ணீர் என எதுவுமே வழங்கவில்லை. ஒரு சில நாட்கள் திறக்கப்பட்ட போர்வெல் தண்ணீரையும் மின்மோட்டார் பொருத்தியுள்ளவர்கள் தண்ணீரை உறிஞ்சி மாடியில் உள்ள அவர்களது தொட்டியில் நிரப்பி கொள்கின்றனர். இதனால் பாமர மக்கள் எந்த தண்ணீரையும் பெற முடியாமல் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம் உள்ளது. மேலும் இப்பகுதியி–்ல ஆடு, மாடுகளுக்கு கூட குடிக்க தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. சமீபத்தில் பெய்த மழையினால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தும் இன்னும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கவி–்லலை. இதுகுறித்து இப்பகுதயினர் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் நேற்று உசிலம்பட்டி- பேரையூர் சாலை வலையபட்டி பஸ்நிறுத்தத்தில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் உசிலம்பட்டி நகர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுடன் போனில் பேசி, உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பின்பே மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Usilampatti ,
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...