×

திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவெறும்பூர், மார்ச் 16:திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி நேற்று பனையக்குறிச்சி, குவளக்குடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொகுதிக்கு உட்பட்ட பனையக்குறிச்சி, குவளக்குடி, கிழமுல்லைக்குடி ஆகிய ஊராட்சிகளில் முக்கிய நிர்வாகிகளையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை  முதல்வராக்க திமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், திமுக தேர்தல் வாக்குறுதிகளை பெண்களிடம் எடுத்து எடுத்துக்கூறி, திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து கோரிக்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். வேட்பாளருடன் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், ஒன்றிய செயலாளர் கருணாநிதி, ஒன்றிய பெருந்தலைவர் சத்யா கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் மகா மற்றும் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags : Thiruverumbur ,DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...