×

பள்ளி மாணவிகளை தொர்டந்து பெற்றோர் 4 பேருக்கு கொரோனா தொற்று பரவல்

தஞ்சை, மார்ச் 16: தஞ்சாவூர் அருகே அம்மாப்பேட்டையில் பள்ளி மாணவிகள் 56 பேருக்கு கொரோனாதொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தஞ்சாவூர் அருகே அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வரை படிக்கும் 1200 மாணவிகளில் 56 பேருக்கும், ஒரு ஆசிரியைக்கும் கடந்த இரு தினங்களாக கொரோனா தொற்று ஏற்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவிகளின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 24 கிராமங்களில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் ஒரிரு தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று மாணவிகளின் நான்கு பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நான்கு பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...