×

விவசாயிகள் கோரிக்கை இலுப்பூர், அன்னவாசல், விராலிமலையில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை, மார்ச் 16: விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் பொதுமக்கள், பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அப்போது பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், விராலிமலை தொகுதி மக்களுக்காக மெழுகுவர்த்தியை போல் உருகி பணியாற்றி வருகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் விராலிமலை தொகுதியை மாற்றி காட்டியுள்ளேன். நான் செல்லும் இடமெல்லாம் நீங்கள் எங்கள் வீட்டு பிள்ளை போல் உங்களுக்கு தான் வாக்களிப்போம் என்று மக்கள் கூறுவதை கேட்கும்போது சந்தோஷமாகவும், மன நிறைவாகவும் உள்ளது. நான் என்றும் உங்களுக்காக உழைப்பேன். என் தொகுதி மக்களுக்காக கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை உழைத்து கொண்டே இருப்பேன். மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து விராலிமலை என்றும் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார். விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்கிறார்.

Tags : AIADMK ,Vijayabaskar ,Iluppur ,Annavasal ,Viralimalai ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி