×

தொழிலாளர்கள் வலியுறுத்தல் நாகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கலின்போது 20 ரூபாய் நோட்டு கட்டுகளை கொடுத்த சுயேச்சை வேட்பாளர்

நாகை, மார்ச் 16: நாகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கலின்போது 20 ரூபாய் நோட்டு கட்டுகளை தேர்தல் அலுவலரிடம் சுயேச்சை வேட்பாளர் அளித்தார். நாகை ஆர்டிஓ அலுவலகத்தில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். நாகை சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக நாகையை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தனிநபராக வந்தார். பின்னர் வேட்பாளர் உதவி மையத்தில் தான் தாக்கல் செய்ய வேண்டிய வேட்புமனுக்கள் சரியாக உள்ளதா என்று அலுவலரிடம் சரிபார்த்தார்.

இதைதொடர்ந்து 20 ரூபாய் நோட்டு கட்டுகளை ஒரு தட்டில் எடுத்து கொண்டு வேட்புமனுவுடன் தேர்தல் நடத்தும் அலுவலர் மணிவேலன் அறைக்கு சென்றார். பின்னர் அங்கு அவர் தனது வேட்புமனுவையும், அதற்கு கட்ட வேண்டிய டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரம் வழங்கினார். டெபாசிட் தொகை 20 ரூபாய் நோட்டுகளாய் கொடுத்ததை பார்த்து தேர்தல் நடத்தும் அலுவலர் மணிவேலன் ஆச்சரியமடைந்தார். பின்னர் டெபாசிட் தொகை மற்றும் வேட்புமனுவை பெற்று கொண்டார்.

Tags : Naga ,
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா