×

சின்னதாராபுரம் அருகே சாலை விபத்தில் தம்பதி படுகாயம்

க.பரமத்தி, மார்ச் 16: சின்னதாராபுரம் அடுத்த ஐந்துரோடு அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதி படுகாயமடைந்தனர். கரூர் அடுத்த விசுவநாதபுரியை சேர்ந்தவர் செல்லாண்டி மகன் மாரிமுத்து(60), இவரது மனைவி செல்லம்மாள் (56). இருவரும் நேற்று உறவினர்
வீட்டிற்கு செல்ல சின்னதாராபுரம் சாலையில் மொபட்டில் சென்றுள்ளார். தும்பிவாடி அருகேயுள்ள ஐந்துரோடு பேருந்து நிறுத்தம் வந்தபோது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த லாரி மோதியது. இதில் படுகாயமடைந்த மாரிமுத்து, செல்லம்மாளை அருகிலிருந்தவர்கள் கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் சின்னதாராபுரம் போலீசார் முத்துசாமி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Chinnatharapuram ,
× RELATED பசுபதிபாளையம் பாலம் அருகே அமராவதி...