சென்னை அருகே வெள்ளவேடு பகுதியில் துப்பாக்கி முனையில் செம்மரக் கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவில் இருந்து லாரியில் செம்மரம் கடத்தி வந்த திருமழிசையைச் சேர்ந்த டேனியல், விஜி, வெள்ளவேடு சுரேஷ், ரகுல் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்டவர்களிடமிருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
