×

பறக்கும் படையினர் சோதனையில் மாட்டு வியாபாரியிடம் ரூ.53 ஆயிரம் பறிமுதல்

மொடக்குறிச்சி, மார்ச் 16:  அரச்சலூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.53 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரச்சலூர் அடுத்த கண்ணம்மாபுரத்தில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாமக்கல் மாவட்டம் வேட்டுவபாளையத்தை சேர்ந்த கந்தசாமி (54), மாட்டு வியாபாரி. திருப்பூர் மாவட்டத்தில் மாடுகளை விற்று விட்டு பைக்கில் அரச்சலூர் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது, கண்ணம்மாபுரத்தில் பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனையிட்டனர். இதில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.53 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராணியிடம் ஒப்படைத்தனர்.

Tags : Flying Squad ,
× RELATED அதிமுக, பாஜவினரிடம் ₹1.76 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி