×

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா வேட்புமனு தாக்கல்

நெல்லை, மார்ச் 16: நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளரான மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா வேட்பு மனுத்தாக்கல் செய்தார். மேலும்  சுயேட்சைகள் இருவர் மனுக்களைத் தாக்கல் செய்தனர். நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்டச் செயலாளருமான தச்சை கணேசராஜா, வேட்பு மனுத்தாக்கல் செய்ய நேற்று காலை 10 கார்களில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரோடு நாங்குநேரி தாலுகா அலுவலகம் வந்தார். பின்னர் நடத்தை விதிகளின் படி, எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் பெரியபெருமாள், பாஜ மாவட்டத் தலைவர் மகாராஜன் ஆகியோருடன் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தேர்தல் அதிகாரியான மாவட்ட வழங்கல்
அலுவலர் குழந்தைசாமியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவில் கணேசராஜா தனது பெயரில் ரூ.8.8 கோடி சொத்தும், தனது மனைவியின் பெயரில்  ரூ.1.92 கோடி சொத்தும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவரது பெயரில் ரூ.1.41 கோடியும், மனைவி பெயரில் ரூ.49 லட்சமும் கடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியை முன்னிட்டு அதிமுக பாளை ஒன்றியச் செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், அக்ரோ இயக்குநர் உக்கிரபாண்டியன், அத்திமேடு லட்சுமிகாந்தன், அரியகுளம் செல்வராஜ்  உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து வாழ்த்துத் தெரிவித்தனர். சுயேச்சைகள் மனு தாக்கல்: இதே போல் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு களக்காட்டைச் சேர்ந்த ஞானபாலாஜி என்பவரும் கொங்கந்தன்பாறையைச் சேர்ந்த நல்லகண்ணு என்ற கார்த்திக் என்பவரும் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். இதையொட்டி நாங்குநேரி தாலுகா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : AIADMK ,Tascha Ganesaraja ,Nanguneri ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...