×

v சமாதானபுரம் ஆட்டோ டிரைவர் வீட்டில் கொள்ளை

கேடிசி நகர், மார்ச் 16: பாளை., சமாதானபுரத்தை சேர்ந்தவர் ராஜன்கோயில்பிள்ளை (53). ஆட்டோ டிரைவரான இவர், சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு கேடிசி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.46 ஆயிரம் ரொக்கம், ஒரு பவுன் மோதிரம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் ஆகும். இதுகுறித்து அவர், பாளை. போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Robbery ,Samathanapuram ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 6 வழிப்பறி...