×

திருச்செங்கோட்டில் கொமதேக ஈஸ்வரன் வேட்புமனு தாக்கல்

திருச்செங்கோடு, மார்ச் 16: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து, நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆர்டிஓ மணிராஜிடம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது நகர செயலாளர் தாண்டவன் கார்த்தி, ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கேவல் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தேர்தல் பணிமனையில் இருந்து ஊர்வலமாக அவர் சென்றார். தெற்கு ரதவீதி சந்திப்பில் ஊர்வலம் நிறைவடைந்தது. காலையில் தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. நாமக்கல் எம்பி சின்ராஜ் முன்னிலையில், வேட்பாளர் ஈஸ்வரன் தேர்தல் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியின் போது, கொமதேக மாவட்ட செயலாளர் நதிராஜவேல், மாநில இளைஞரணி சூர்யமூர்த்தி, மாநில விவசாய அணி சந்திரசேகரன், மண்டல இளைஞரணி செயலாளர் ராயல் செந்தில், மாவட்ட பொருளாளர் தங்கமுத்து, நிர்வாகிகள் தமிழ்செல்வன், பெரியசாமி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், நந்தகுமார், சேன்யோ குமார், எம்ஆர்டி வெங்கடாசலம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கோமதி ஜெயம், நகர தலைவர் நாகராஜ், நகர செயலாளர் அசோக்குமார், வெங்கடசலம், செல்வம், வெங்கடேஷ், பழனிசாமி, ரவிச்சந்திரன், சுப்ரமணியம், கார்த்திகேயன், வெங்கடாசலம், சிவக்குமார் உடனிருந்தனர். மேலும், கூட்டணி கட்சியை சேர்ந்த மார்க்சிஸ்ட் ஆதிநாராயணன். இந்திய கம்யூனிஸ்ட் மணிவேல், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சர்வேயர் செல்வகுமார், பொருளாளர் பொன்னுசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் குருசாமி, ஆதித்தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Komadeka Eeswaran ,Tiruchengode ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் ஏட்டு விபத்தில் பலி